• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்கில் சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

October 4, 2017 தண்டோரா குழு

ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்கக்கோரும் வழக்கில் சபாநாயகருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைப்பெற்றது.இதில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த 12 எம்.எல்ஏக்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்நிலையில், இது தொடர்பாக திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது 12 எம்.எல்.ஏ.க்களும் பிப்ரவரியில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் என்றும் கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததால் எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறிக்கவும் திமுக கொறடா சக்கரபாணி தரப்பில் ஆஜரான வக்கீல் அமரேந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இது குறித்து சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பி அக்.12-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க