• Download mobile app
01 Dec 2025, MondayEdition - 3582
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓபிஎஸ்சின் கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன் – அமைச்சர் ஜெயக்குமார்!

April 17, 2017 தண்டோரா குழு

ஒற்றுமையாக செயல்படுவது கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்லது என்ற அடிப்படையில் இந்த ஆலோசனை நடந்தது. ஓபிஎஸ்சின் கருத்தை முழுமனதுடன் வரவேற்கிறேன் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீடீர் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,

தேர்தல் ஆணையத்தில், இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அது குறித்து, விவாதித்து ஆலோசனை செய்தோம். இணைந்து செயல்பட வேண்டும் என்ற ஒபிஎஸ் கருத்து வரவேற்கபட வேண்டிய ஒன்று.
அதற்காக ஒன்றுமையாக செயல் படுவது குறித்தும் ஆலோசனை நடத்தினோம் என்றார்.

மேலும், சசிகலா ராஜினாமா குறித்து தகவல் ஏதுமில்லை என்றார்.

மேலும் படிக்க