• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓடிசாவில் வாய்க்காலில் குழந்தை பெற்றெடுத்த பெண்

December 16, 2017 தண்டோரா குழு

ஓடிசாவில் பிரசவ வேதனை அடைந்த பெண்ணிற்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுத்தால்,வாய்க்காலில் குழந்தை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில், தல்ஜனிகுடா கிராமத்தை சேர்ந்தவர் நிறைமாத கர்ப்பிணியான தானேய் முதுலி. இவருடைய கணவர் அதிக காய்ச்சலால் அவதிப்பட்டு அருகிலிருந்த கோராபுட் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படிருந்தார்.
இந்நிலையில், கணவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற தானேய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அந்த மருத்துவமனையில் இருந்த வெளி நோயாளிகள் பிரிவுக்கு சென்று, அங்கிருந்த மருத்துவரின் உதவியை நாடியுள்ளார். அவருடைய மருத்துவ ஆவணங்களை அந்த மருத்துவர் கேட்டுள்ளார். கணவனை பார்க்க மருத்துவமனைக்கு செல்வதால், அவருடைய மருத்துவ ஆவணங்களை எடுத்து செல்லவில்லை. அவரிடம் ஆவணங்கள் இல்லாதாதால், அவருக்கு சிகிச்சை அளிக்க, அந்த மருத்துவர் மறுத்துவிட்டார்.

வேறு வழிதெரியாமல், உதவியற்ற தானோய், அந்த மருத்துவமனை வளாகத்தில் இருந்த ஒரு தேநீர் கடைக்குப் பின் உள்ள, ஒரு தனிமையான இடத்திற்கு சென்று அங்கிருந்த வாய்க்காலில், பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, தேநீர் கடைக்கு வந்தவர்கள், அவளை பார்த்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே அவளையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தானேய் மற்றும் அவளது குழந்தைக்கு மருத்துவர்கள் தேவையான சிகிச்சையை அளித்தனர். தாயும் குழந்தையும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவத் தொடர்ந்து, கோராபுட் குடிமக்கள் மன்றம் இந்த சம்பவத்திற்கு உயர்மட்ட விசாரணையை கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க