• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒலிம்பிக் வெற்றிக்கு பிறகு இந்தியாவில் பேட்மிட்டன் போட்டி பிரபலமாகி உள்ளது

October 5, 2017 தண்டோரா குழு

ஒலிம்பில் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பிறகு பேட்மிட்டன் போட்டியும் பிரபலமாகி உள்ளதாக பேட்மிட்டன் வீராங்கனை பி வி சிந்து கூறியுள்ளார்.

கோவையில் தனியார் நிறுவன ஸ்போர்ட்ஸ் அகாடமியை பேட்மிட்டன் வீராங்கனை பி வி சிந்து திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

பயிற்சியாளர் கோபிசந்தின் அகாடமியில் சேர்ந்தால் மட்டும் சாம்பியன் ஆக முடியாது கடின உழைப்பு இருந்தால் மட்டுமே சாம்பியன் பட்டத்தை பெற முடியும்.நல்ல பயிற்சியாளர் கிடைத்ததால் தான், பேட்மிட்டன் விளையாட்டில் தான் வெற்றி பெறு முடிந்தது.கடின உழைப்பும் பெற்றோரின் ஆதரவும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்றார்.

மேலும் தன்னை பத்மபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்ததற்கு நன்றி தெரிவித்து கொண்டார். முன்பு அதிக அளவில்கி ரிக்கெட் போட்டி மட்டுமே பிரபலமாகி இருந்ததாகவும் , ஆனால் தற்போது ஒலிம்பில் போட்டியில் வெற்றி பெற்றதற்கு பிறகு பேட்மிட்டன் போட்டியும் பிரபலமாகி உள்ளதாகவும் இந்த விளையாட்டில் சேர பலரும் ஆர்வம் காட்டி வருவதாக கூறினார்.

மேலும் படிக்க