• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரேநாளில் மது, புகையிலை விற்ற 65 பேர் கைது

December 27, 2021 தண்டோரா குழு

கோவையில் போலீசாரின் சோதனையில் ஒரேநாளில் மது, புகையிலை விற்ற 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகரில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கோவை மாநகரில் கடைவீதி, ஆர்.எஸ்.புரம், வெறைட்டிஹால் ரோடு, பீளமேடு, சரவணம்பட்டி, குனியமுத்தூர், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் மாநகர போலீசார் மற்றும் மது விலக்கு அமல்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மாநகர் முழுவதும் நேற்று ஒரேநாளில் மது, புகையிலைப் பொருட்கள் விற்றதாக 65 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் மற்றும் கிலோகணக்கில் புகையிலைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், சட்டவிரோத மது விற்பனை, கடைகளில் புகையிலைப்பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க