• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு ரூபாய் மிட்டாயில் 300கோடி வருமானம்: பல்ஸ் நிறுவனம்

March 10, 2017 தண்டோரா குழு

வெறும் ரூ.1 விலையில் மிட்டாய்களை விற்று ரூ.300 கோடி வருமான பார்த்து பெரும் சாதனை படைத்துள்ளது பல்ஸ் நிறுவனம். டி.எஸ். குழுமத்தைச் சேர்ந்தது பல்ஸ் நிறுவனம்.

நுகர்வோர் சந்தையில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா பெரும் பங்காற்றி வருகிறது. இதனால் இந்திய பல்பொருள் வர்த்தக சந்தையைக் கைப்பற்ற நாளுக்கு நாள் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டிபோட்டுச் செயல்பட்டு வருகின்றன.

அந்த வகையில், டி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த பல்ஸ் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.1 விலையுள்ள பல்ஸ் மிட்டாய்களை விற்று, இந்திய அளவில் ரூ. 300 கோடி வர்த்தகம் செய்துள்ளது. இந்த பல்ஸ் மிட்டாய்கள், மாங்காய்ச் சுவை கொண்டதாகும்.

அதற்குச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்திய நுகர்பொருட்கள் சந்தையில் உள்ள ஓரியோ, மார்ஸ் பார் போன்ற நிறுவனங்கள், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முயன்றும், ரூ. 300 கோடி ஆண்டு வர்த்தகத்தை எட்ட முடியவில்லை. இந்நிலையில், வெறும் மிட்டாய் விற்று டி.எஸ். குழுமம் இந்த சாதனையைப் படைத்துள்ளது.

பெட்டிக் கடைகள் முதல் பல வர்த்தக இடங்களிலும் ரூ.1 சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டால், உடனே பல்ஸ் அல்லது அதன் விலை கொண்ட மிட்டாய்களை வியாபாரிகள் கொடுப்பதும் வழக்கமாக உள்ளது. இதுவும் பல்ஸ் மிட்டாய் விற்பனையில் முக்கிய பங்காற்றியுள்ளது என்றே கூறலாம்.

மேலும் படிக்க