• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு நபரை தற்கொலையில் இருந்து காப்பாற்றினால், ஒரு குடும்பத்தை காப்பாற்றுவதற்கு சமம் !

September 6, 2021 தண்டோரா குழு

மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்யும் நபர்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனை வழங்குவது குறித்து போலீசாருக்கான 2 நாட்கள் பயிற்சி முகாம் கோவையில் தொடங்கியது.

கோவை மாவட்ட பகுதிகளில் தினமும் 3 பேர் வரை தற்கொலை செய்கின்றனர். மன அழுத்தம், குடும்ப பிரச்சினை உள்ளிட்ட பல காரணங்களால் தற்கொலை செய்பவர்களை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சார்பில் கவுன்சிலிங் மையம் கோவையில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில் துவங்கப்பட உள்ளது.

இந்த மையத்தில் பணிபுரியும் பெண் போலீசாருக்கான 2 நாள் பயிற்சி முகாம் எஸ்.பி அலுவலகத்தில் துவங்கியது.

முகாமை போலீஸ் எஸ்.பி. செல்வநாகரத்தினம் துவங்கி வைத்து பேசியதாவது:-

காதல் தோல்வி, குடும்ப பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நபர்கள் ஒரு நொடியில் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு உரிய உளவியல் ஆலோசனை வழங்கினால், அவர்களை தற்கொலை செய்வதில் இருந்து நாம் தடுக்கலாம்.

ஒரு நபரை தற்கொலையில் இருந்து காப்பாற்றினால், ஒரு குடும்பத்தை காப்பாற்றுவதற்கு சமம். இந்த 2 நாட்கள் பயிற்சி முகாம் முடிந்ததும், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஒரு பகுதியில் கவுன்சிலிங் மையம் துவங்கப்படும். இந்த மையத்தை பொதுமக்கள் 24 மணி நேரமும் அணுகும் வசதி ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க