May 15, 2019 தண்டோரா குழு
ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து கடந்த ஞாயிற்றுகிழமை பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து; அவர் தான் நாதுராம் கோட்சே” என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கமலின் இந்த கருத்துக்கு பாரதீய ஜனதா கட்சி, அ.தி.மு.க. மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி கமல் மீதும் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர் மோடி,
அனைவரையும் ஆரத்தழுவும் தத்துவம் கொண்டது இந்து மதம். அம்மதமானது பிற உயிர்களை துன்புறுத்தவோ, கொல்லவோ அனுமதிக்காது.ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது. அவர் உண்மையான இந்து அல்ல.உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை.
என பிரதமர் மோடி கூறியுள்ளார்.