• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவிப்பு

September 14, 2019 தண்டோரா குழு

இரட்டைக் கோபுர தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அல்-கைதா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனின் மகன்தான் ஹம்சா பின்லேடன். இவர் ஒசாமா பின்லேடனை அடுத்து அல்கொய்தா தலைமை பொறுப்பை ஏற்றிருந்தார். ஹம்சா பின்லேடன் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாக ஜூலை மாதம் முதல் பல ஊடகங்களில் யூக அடிப்படையில் செய்திகள் வெளியாகி வந்தன. இப்போது முதல் முறையாக அமெரிக்க அதிபர் இதை ஒப்புக்கொண்டுள்ளார் “ஆப்கானிஸ்தான் / பாகிஸ்தான் பிராந்தியத்தில்” அமெரிக்க வான்வழித் தாக்குதலில் ஹம்சா கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா ஹம்சா பின்லேடன் தலைக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவித்திருந்த நிலையில் தற்போது ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க