September 5, 2019 தண்டோரா குழு
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தை 19ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது, அவர், சிபிஐ கஸ்டடியில் உள்ளார். 4 முறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். எனினும் அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ விரும்பவில்லை.
இதற்கிடையே, அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. இதனால், அமலாக்கத்துறை அவரை கைது செய்து விசாரிக்க தடை இல்லை. அமலாக்கத்துறை கைது செய்தால், திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்பட வாய்ப்பு இல்லை என்பதால், அமலாக்கத்துறை முன்னால் சரணடைய தயார் என்று சிதம்பரம் தரப்பினர் சிபிஐ நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி, வரும் 19ம் தேதி வரை சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதுடன், திஹார் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.