March 23, 2018 தண்டோரா குழு
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
அந்நிய முதலீடுக்கான அனுமதி பெற்றுத்தர ஐஎன்எக்ஸ் நிறுவனத்திடம் ரூ. 10 லட்சம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரதின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ போலீசார் கைது செய்தனர்.
ஏற்கெனவே 12 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்ட நிலையில் கார்த்திக் சிதம்பரத்தை 12 நாட்களுக்கு அதாவது வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் டில்லி திஹார் சிறையில் அடைக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்திக் சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.15 லட்சத்தை பிணயத்தொகையாக செலுத்தவும், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.