• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தலைவராக மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு

June 1, 2017 தண்டோரா குழு

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தலைவராக ஸ்லோவேகியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடு பொதுச்சபை ஐக்கிய நாடுகளின் முக்கிய அங்கங்களில் ஒன்றாகும். ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளை கண்காணிக்கவும், நிரந்தரம் அல்லாத நாடுகளின் உறுப்பினர்களை பாதுகாப்பு சபைக்கு தேர்ந்தெடுப்பதும், நாடுகளுக்கிடையில் நட்பான உறவை பாதிக்கும் எந்த ஒரு சூழ்நிலையிலும் சமாதான தீர்வு காண பரிந்துரை செய்வதும் இந்த சபையின் சில முக்கிய கடமைகளாகும்.

இந்த சபையின் 72வது கூட்டம் வரும் செப்டம்பர் மாதம், நடைபெறவுள்ளது. இந்த சபையின் தற்போதய பொதுச்சபை தலைவர் பீட்டர் தாம்சனுடைய பதவிக்காலம் செப்டம்பர் மாதத்தில் முடிவடைகிறது. இதையடுத்து ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தலைவராக ஸ்லோவேகியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து ஐநாவின் செயலாளர் ஜெனரல் அண்டோனியோ கட்டர்ரேஸ் கூறுகையில்,

“மிரோஸ்லாவ் லாஜ்காக் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தலைவராக தேர்வுசெய்யப்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். விரையில் இந்த பதவியிலிருந்து விலகும் பீட்டர் தாம்சனுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மிரோஸ்லாவ் லாஜ்காக் ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகளின் அனைத்து அம்சம்களுக்கும் ஒரு வியக்கத்தக்க கட்டளையை எப்பொழுதும் தருவார். எங்கள் பணியை நிர்வகிக்கும் அனைத்து கொள்கைகளுக்கும் வலுவான அர்ப்பணிப்பு அவரிடம் உண்டு” என்றார்.

மேலும் படிக்க