• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.டி.எமில் பணம் எடுக்க முடியாததால் யாசகம் கேட்ட ரஷ்ய இளைஞர்

October 10, 2017 தண்டோரா குழு

ஏ.டி.எமில் பணம் எடுக்க முடியாததால் ரஷ்ய இளைஞர் ஒருவர் காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்டுக் கொண்டிருந்த காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ரஷ்ய நாட்டை சேர்ந்தவர் ஏ.இவாஞ்சலின் (24). இவர் செப்.24-ம் தேதி இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், செவ்வாய் காலை சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வந்துள்ளார். கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் சில கோயில்களைப் பார்த்து விட்டு மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரக்கோட்டம் கோயிலுக்கு அருகில் உள்ள ஏ.டி.எம்.இல் பணம் எடுக்கச் சென்றார்.

அப்போது,அவரது PIN நம்பர் லாக் ஆகிவிட பணம் எடுக்க முடியாமல் தவித்தார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு கட்டத்தில் வெறுப்படைந்த அவர் கோயில் வாசலில் யாசகம் கேட்டு அமர்ந்திருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார் உடனடியாக இவாஞ்சலினை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரது பயண ஆவணங்களைச் சரிபார்த்தனர். அப்போது அசலான பாஸ்போர்ட், விசா என்று சட்டபூர்வமான ஆவணங்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவருக்குப் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படிக்க