July 28, 2020
தண்டோரா குழு
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி பட உலகில் வாரிசுகள் ஆதிக்கம் இருப்பதும் வெளியில் இருந்து வருபவர்களை வளரவிடாமல் அவர்கள் தடுப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இதற்கிடையில்,சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் தன்னை இந்தி படங்களில் பணியாற்ற விடாமல் ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியிருந்தார்.இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து,ரஹ்மானுக்கு ஆதரவாக பலரும் டுவீட் செய்து வருகிறார்கள். கவிஞர் வைரமுத்து உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக செயல்படும் இந்தி திரையுலகினரை சாடி வருகின்றனர்.இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட் வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில்,
பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது என கூறியுள்ளார்.