• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏப்ரல் 23ம் தேதி முதல் கோவை – ராஜ்கோட் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

March 31, 2021 தண்டோரா குழு

கோவையில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டுக்கு ஏப்ரல் 23ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கோவை ரயில் நிலையத்தில் இருந்து வரும் ஏப்ரல் 23ம் தேதி முதல், வெள்ளிக்கிழமைகளில், இரவு 12.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் மாலை 5.50 மணிக்கு ராஜ்கோட்டை சென்றடையும். இதேபோல், ராஜ்கோட்டில் இருந்து ஏப்ரல் 25ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில்,காலை 5.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் இரவு 9.30 மணிக்கு கோவையை வந்தடையும். இந்த ரயில்கள் திருப்பூர்,ஈரோடு,சேலம், திருப்பத்தூர்,பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம்,ஹிந்துபூர்,அனந்தபூர், குண்டக்கல், சோலாப்பூர், புணே, வதோரா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் படிக்க