March 31, 2021
தண்டோரா குழு
கோவையில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டுக்கு ஏப்ரல் 23ம் தேதி முதல் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கோவை ரயில் நிலையத்தில் இருந்து வரும் ஏப்ரல் 23ம் தேதி முதல், வெள்ளிக்கிழமைகளில், இரவு 12.15 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் மாலை 5.50 மணிக்கு ராஜ்கோட்டை சென்றடையும். இதேபோல், ராஜ்கோட்டில் இருந்து ஏப்ரல் 25ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில்,காலை 5.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் இரவு 9.30 மணிக்கு கோவையை வந்தடையும். இந்த ரயில்கள் திருப்பூர்,ஈரோடு,சேலம், திருப்பத்தூர்,பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம்,ஹிந்துபூர்,அனந்தபூர், குண்டக்கல், சோலாப்பூர், புணே, வதோரா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.