• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏப்ரல் 21-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை – செங்கோட்டையன்

April 18, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் ஏப்ரல் 21-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்

“ தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்று வீசுவதால் வரும் ஏப்ரல் 21-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க பள்ளி தேர்வுகளை மாற்றியமைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 21 முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுகள் வேறு தேதியில் நடத்தப்படும். வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால், தனியார் பள்ளிகள் சிறப்பு பயிற்சி வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என்றார் அவர்

மேலும் படிக்க