• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏசிசி சிமெண்ட் ஆலை வளாகத்தில் அடிக்கடி விபத்திற்குள்ளாகும் சரக்கு ரயில்

March 13, 2021 தண்டோரா குழு

ஏசிசி சிமெண்ட் ஆலை வளாகத்தில் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அடிக்கடி சரக்கு ரயில் விபத்திற்குள்ளாகும் சம்பவம் தொடர்கிறது.

கோவையை அடுத்த மதுக்கரை பகுதியில் ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இங்கு 1000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இதன் ஆலை நிர்வாகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன.ஏசிசி சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சிமெண்ட் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இன்று காலை க்ளிங்கர் ஏற்றி வந்த ரயில்வே வேகன் கம்பெனியின் உள்ளே இருந்த இரண்டு கேட்டுகளை உடைத்தெரிந்து விட்டு மயில்சாமி என்பவரின் தோப்பிற்குள்ளே சரிந்து விழுந்தது.

கடந்த வாரம் இதே போல் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்ட நிலையில் மீண்டும் இன்று ரயில் தடம் புரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிமெண்ட் ஆலை நிர்வாகம் முறையான பராமரிப்பு செய்யாததே அடிக்கடி விபத்து ஏற்பட காரணமென அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.மேலும் இந்த பாதை வழியாக துப்புரவு பணியாளர்கள் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

ஆலை நிர்வாகம் தொடர் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் படிக்க