• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவையில் பத்திரிக்கையாளர்கள் காத்திருப்பு போராட்டம்

April 21, 2018 தண்டோரா குழு

சமூக வலை தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக விமர்சித்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தும் கைது செய்யாத காவல் துறையை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் இன்று(ஏப் 21)காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலா தேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்தது தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பத்திரிக்கையாளரைச் சந்தித்தார்.அப்போது பெண் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலாளிக்காமல் கன்னத்தில் தட்டியுள்ளார். இது குறித்து பெண் நிருபர் ஆளுநரின் செயல் அருவருக்கத்தக்க ஒன்று என டிவிட் செய்ததை ஒட்டி , அப்பெண்ணிடம் ஆளுநர் மன்னிப்பு கேட்டிருந்தார்.

இந்நிலையில் முகநூலில் நடிகர் எஸ்.வி.சேகர் பெண் நிருபரை ஒருமையில் பேசியதோடு,பெரிய ஆட்களுடன் தனிமையில் இருக்காமல், நிருபராகவோ,செய்தி வாசிப்பாளராகவோ வர முடியாது என ஆபாசமான வார்த்தைகளால் பதிவிட்டு இருப்பது, பெண்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ஒட்டு மொத்த மீடியாக்களும் கிரிமினல், பொறுக்கிகளின் பிளாக்மெயில் பேர் வழிகளின் பிடியில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருப்பதாக பதிவிட்டதை கண்டித்து எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிய சொல்லி நேற்று கோவை பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் நிருபர்கள் மூன்று பேர் புகாரளித்திருந்தனர்.

இந்நிலையில் மாநகர ஆணையாளர் உடனடியாக எஸ்.வி.சேகர் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க