December 18, 2021
தண்டோரா குழு
கோவையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உட்பட 9 எம்.எல்.ஏ.,க்கள் மீது கோவை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி எம்எல்ஏ மற்றும் எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன், பி ஆர் ஜி அருண்குமார், கேஆர் ஜெயராம், ஏ கே செல்வராஜ், அமுல் கந்தசாமி, தனபால், தாமோதரன், சூலூர் கந்தசாமி, மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தொற்று நோயை பரப்பும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதால் அவர்கள் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி எம்எல்ஏ உள்பட 9 எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் 7 பேர் உள்பட மொத்தம் 16 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.