June 21, 2021
தண்டோரா குழு
எஸ்.டி.பி.ஐ.கட்சியின்13 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி,நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
எஸ்.டி.பி.ஐ.கட்சி துவங்கி இன்று 13 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது.இதனை தமிழகம் முழுவதும் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக மாவட்ட தலைவர் ராஜா உசேன் தலைமையில், கோவையில் கோட்டை மேடு தலைமை அலுவலகம், செல்வபுரம், குணியமுத்தூர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட பகுதிகளில்கட்சி கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கபட்டது.
இதனை தொடர்ந்து,கோவை அரசு மருத்துவமனையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இரத்ததானம் செய்தனர். தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் பணி புரியும், மருத்துவ பணியாளர்களுக்கு கொரானா தடுப்பு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.இதே போல நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக, போத்தனூர்,கோவை பதூர் அன்பு இல்லம் ஆகிய பகுதிகளில் இயங்கும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு போர்வைகள் மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
பின்னர்,பொதுமக்களுக்கு முககவசம் வழங்குதல் ஆதரவற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் முகமது இசாக்,மண்டல செயலாளர் முஸ்தபா, மாநில வர்த்தக அணி செயலாளர் அப்துல் கரீம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கீம்,தொழிற்சங்க தலைவர் ரவூப் நிஸ்தார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் உசேன், மாவட்ட துணைதலைவர் அன்சர் செரீப், மாவட்ட செயலாளர்கள் இக்பால், மற்றும் உமர் செரீப்,செய்தி தொடர்பாளர் மன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.