• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எஸ்.எம்.கிருஷ்ணா பா.ஜ.க- வில் இணைய முடிவு – எடியூரப்பா

February 4, 2017 தண்டோரா குழு

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.எம். கிருஷ்ணா. இவர் மன்மோகன் சிங் அரசில் மத்திய அமைச்சராகவும் அதற்கு முன் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். கட்சியின் மூத்த தலைவரான அவர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரது அமைச்சரவைகளிலும் இடம்பெற்றிருந்தார். மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்திருக்கிறார்.

அண்மைக் காலமாக அவர், “காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருக்கிறார். அதையடுத்து, சில நாட்களுக்கு முன்னர், அக்கட்சியிலிருந்து விலகினார்.

அவர் தனது அரசியல் எதிர்காலம் குறித்து என்ன முடிவெடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பாஜகவில் சேருவார் என்று பேசப்பட்டு வந்தது. அதைப் போல், அவர் பாஜகவில் சேர முடிவு செய்துள்ளார் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தற்போது தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க