• Download mobile app
14 Jul 2026, TuesdayEdition - 3807
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் பா.ஜா.வில் இணைந்தனர்

January 17, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் மகளும் பேரனும் பாரதீய ஜனதா கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள அவரது உருவச் சிலைக்கும், எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்ஜி சக்கரபாணியின் மகள் லீலாவதியும் அவரது மகன் பிரவீணும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர்.

பிரதமர் மோடியின் நேர்மையைப் பார்த்து பாஜக-வில் இணைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இவர்களில் லீலாவதி எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க