• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் பா.ஜா.வில் இணைந்தனர்

January 17, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் மகளும் பேரனும் பாரதீய ஜனதா கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள அவரது உருவச் சிலைக்கும், எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கும் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்ஜி சக்கரபாணியின் மகள் லீலாவதியும் அவரது மகன் பிரவீணும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதீய ஜனதா கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர்.

பிரதமர் மோடியின் நேர்மையைப் பார்த்து பாஜக-வில் இணைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இவர்களில் லீலாவதி எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க