• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசப்பட்ட வழக்கு சி.பி.ஐ விசாரணை தேவையில்லை – முதல்வர் பதில் மனு

June 22, 2017 தண்டோரா குழு

கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்களிடம் பேரம் பேசப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ விசாரணை தேவையில்லை என முதல்வர் பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்டது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி வீடியோ ஆதாரம் ஒன்றினை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்.எல்.ஏ. வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை அமைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி சார்பில் தாக்கலான பதில் மனுவில் நம்பிக்கை ஓட்டெடுப்பு விவகாரம் சபாநாயகர் அதிகாரத்திற்கு உட்பட்டது. இதில் சிபிஐ., தலையிட முடியாது. எனவே சிபிஐ., விசாரணை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முதலமைச்சர் அளித்த பதிலுக்கு விளக்கம் அளிக்க கால அவகாசம் தேவை என்று திமுக சார்பில் உடனடியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

மேலும் படிக்க