September 22, 2017
தண்டோரா குழு
தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திரும்ப பெறுவதாக தமிழக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இதையடுத்து, சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.சபாநாயகர் தனபால் பிறப்பித்த இந்த உத்தரவுக்கு எதிராக தொடப்பட்ட வழக்கில் சபாநாயகரின் உத்தரவு ரத்து செய்யமறுக்கப்பட்டது.
இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.இம்மனுவில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.