• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

என் இதயத்தை திருடிவிட்டாள் காவல் நிலையத்தில் புகாரளித்த இளைஞர் !

January 9, 2019 தண்டோரா குழு

காதலி தன் இதயத்தை திருடிவிட்டதாக காதலன் ஒருவன் காவல்நிலையத்தில் புகாரளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏதாவது ஒரு பொருளை காணவில்லை என்றால் காவல்நிலையத்திற்கு சென்று புகாரளிப்பது வழக்கம். தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் படத்தில் நடிகர் தனுஷ் தன் காதலி மீது புகாரளித்ததை போல மகாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவர் காதலிக்கும் பெண் தன் இதயத்தை திருடிவிட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இளைஞர் அளித்த புகாரைகண்டு காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சட்டப்படி இந்த பிரச்சனைக்கு விடைகண்டுபிடிக்க முடியாததால் என செய்வது என்று திகைத்த காவலர்கள் இளைஞர் சமாதானப்படுத்த முயன்றனர்.

எனினும் இளைஞர் காவல்நிலையத்தை விட்டு செல்ல மறுத்தார் பின்பு சில மணி நேரம் அங்கேயே இருந்து பரபரப்பை ஏற்படுத்தியதாக காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இதுபோன்ற சில விசித்திரமான புகார்களை காவல்துறை சந்திக்கிறது இதுபோன்ற புகார்களால் தங்களது நேரம் வீணாகிறது என காவல் அதிகாரி வருத்தம் தெரிவித்தார்.

மேலும் படிக்க