• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என் இதயத்தை திருடிவிட்டாள் காவல் நிலையத்தில் புகாரளித்த இளைஞர் !

January 9, 2019 தண்டோரா குழு

காதலி தன் இதயத்தை திருடிவிட்டதாக காதலன் ஒருவன் காவல்நிலையத்தில் புகாரளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏதாவது ஒரு பொருளை காணவில்லை என்றால் காவல்நிலையத்திற்கு சென்று புகாரளிப்பது வழக்கம். தனுஷ் நடித்த தேவதையை கண்டேன் படத்தில் நடிகர் தனுஷ் தன் காதலி மீது புகாரளித்ததை போல மகாராஷ்டிராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் காதலி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவர் காதலிக்கும் பெண் தன் இதயத்தை திருடிவிட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இளைஞர் அளித்த புகாரைகண்டு காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சட்டப்படி இந்த பிரச்சனைக்கு விடைகண்டுபிடிக்க முடியாததால் என செய்வது என்று திகைத்த காவலர்கள் இளைஞர் சமாதானப்படுத்த முயன்றனர்.

எனினும் இளைஞர் காவல்நிலையத்தை விட்டு செல்ல மறுத்தார் பின்பு சில மணி நேரம் அங்கேயே இருந்து பரபரப்பை ஏற்படுத்தியதாக காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இதுபோன்ற சில விசித்திரமான புகார்களை காவல்துறை சந்திக்கிறது இதுபோன்ற புகார்களால் தங்களது நேரம் வீணாகிறது என காவல் அதிகாரி வருத்தம் தெரிவித்தார்.

மேலும் படிக்க