• Download mobile app
04 Mar 2026, WednesdayEdition - 3675
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“எனது மாமியாரும், கணவரும் என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் ” – மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் புகார்

April 17, 2017 தண்டோரா குழு

என்னை கொலை செய்ய என் கணவரும், மாமியாரும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்ற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் திவ்யா மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் அருகே வசித்து வருகிறார் திவ்யா(27). இவரும் பொள்ளாச்சி அருகே சித்தூரை சார்ந்த மோகன் என்பவரும் காதலித்து 2௦11-ம் ஆண்டு இருவிட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மோகனின் தந்தை(திவ்யாவின் மாமானார்) குணசேகர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திவ்யாவின் மாமியார் சுமதி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திவ்யாவின் கணவர் மோகனை பொள்ளாச்சிக்கு அழைத்ததாகவும் அதன் பின் அவர் அங்கேயே தனது தாயுடன் தங்கிவிட்டார் எனவும் கூறப்படுகிறது. தற்போது மோகனுக்கு அவருடைய தாய் இரண்டாவது திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வதாகாவும் அதற்காக திவ்யாவை கொலை செய்ய திட்டம் தீட்டுவதாகவும் திவ்யா தரப்பில் தெரிவித்தனர்.

இது குறித்து இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் திவ்யா அளித்த மனுவில்

“ எனது கணவர் மோகன் அவரது தாய் சுமதியுடன் சேர்ந்து கொண்டு என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்ற வேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து திவ்யா கூறுகையில்

“ நான் என் கணவருடன் சேர்ந்து வாழவே விருப்பப்படுகிறேன். என் கணவர் நல்லவர் ஆனால் அவரை எனது மாமியார் மூளை சலவை செய்து என்னிடமிருந்து பிரிக்க பார்க்கிறார். அதற்காக எனது கணவர், அவர் தாயுடன் சேர்ந்து கொண்டு என்னை கொலை செய்யவே துணிந்துவிட்டார்.

அவரை தூண்டி விட்ட எனது மாமியார் சுமதி மீது கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் ஆனால் அவர்கள் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்றார்.

மேலும் படிக்க