May 11, 2019 தண்டோரா குழு
எனக்கு வீடு தரவில்லையென்றாலும் பரவாயில்லை கக்கன் வாரிசுகளுக்கு அரசு வீடு தரவேண்டும் என மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இதுநாள் வரை அரசு ஒதுக்கியிருந்த வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையில் வீட்டை காலி செய்ய கூறி நோட்டீஸ் விட்டுள்ளதையொட்டி அவர் அரசு ஆணையை மதித்து வீட்டை காலி செய்து, வேறு வாடகை வீட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசின் இந்த செயலுக்கு எதிராக தங்களது அதிருப்தி மற்றும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த நல்லகண்ணு,
உடனடியாக வீடு காலி செய்யும்படி அரசு கேட்டதால், மன உளைச்சலுக்கு ஆளானேன். எனக்கு வீடு இல்லை என்றாலும், கக்கன் வாரிசுகளுக்கு அரசு உடனடியாக வீடு வழங்க வேண்டும். எனக்காக குரல் கொடுத்த தலைவர்களுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.