• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எந்தவித புள்ளி விபரங்களும் இல்லாமல் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீதம் கொடுத்து நியாமற்றது – ரத்தினசபாபதி

November 1, 2021 தண்டோரா குழு

கோவையில் பிற்படுத்தபட்டோர் உரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்து இருந்த நிலையில் இன்று நீதிமன்றம் பேராணை வழங்கியுள்ளது.
பிற்படுத்தபட்டோருக்கான ஆணையத்தில் சில சமூகத்தினர் மட்டுமே தலைவர்களாக இருகின்றார்கள் என தெரிவித்தார். கடந்த முறை அதிமுக அரசு எந்த சட்டத்திற்கும் உட்படாமல் தேர்தலுக்காக வன்னியருக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அம்பாசங்கர் அறிக்கையின் அடிப்படையில் அறிவித்தது என கூறிய அவர் பிற்படுத்தபட்டோர் சமூகத்தில் ஒரு அரசு உத்தியோகம் கூட பெறாமல் 28 சமூகங்கள் இன்றளவும் உள்ளதாக கூறினார்.

மேலும் கடந்த அரசு கொண்டு வந்த இந்த சட்டம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் தெரிவித்தார். மேலும் எந்தவித புள்ளி விபரங்களும் இல்லாமல் குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் 10.5 சதவீதம் கொடுத்து நியாமற்றது எனவும் கூறினார். இதில் அதிமுக அரசும் திமுக அரசும்
பிழைகள் செய்து உள்ளதாகவும் கூறினார். இந்த பேராணையை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் அதை எதிர்த்து சட்டரீதியாக எதிர்த்து போராடுவோம் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் 60 ஆயிரம் வேலை வாய்ப்பு உருவாக இருப்பதாகவும் அந்த வேலை வாய்ப்பு பறிபோகாமல் இந்த தீர்ப்பு தடுத்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார் தெரிவித்த அவர்
இம்முறை கவனிக்காமல் விட்டால் 30 ஆண்டுகளுக்கு பிற்படுத்தபட்டோருக்கான அரசு வேலை வாய்ப்புகள் பறிபோகும் என கூறினார். இது தொடர்பாக முதல்வரை சந்திக்க முயன்றும் இதுவரை சந்திக்காதது வருத்தம் அளிக்கின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க