• Download mobile app
15 Jan 2026, ThursdayEdition - 3627
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரவையில் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு எதிர்ப்பு – காங்கிஸ் முடிவு

February 18, 2017 தண்டோரா குழு

சென்னை: சட்டப் பேரவையில் தமிழக முதலமைச்சர்‌ எடப்பாடி கே.பழனிச்சாமி அமைச்சரவை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அவருக்கு எதிராக வாக்களிக்க தமிழ்நாடு காங்கிஸ் கட்சி முடிவு செய்தது.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க 15 நாள் அவகாசம் வழங்கியனார்.

அதைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் சனிக்கிழமை எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கு கோரியிருக்கிறார். இது தொடர்பாக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் சனிக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கொறடா விஜயதரணி, சட்டப்பேரவை குழு தலைவர் ராமசாமி உள்ளிட்ட 8 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க