• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பரிமாறி ஆட்சியர் உணவருந்தினார்

December 2, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் 30 நம்பிக்கை மையங்களும்,98 துணை நம்பிக்கை மையங்களும்,26 சுகவாழ்வு மைய சிகிச்சை மையங்களும்,2 ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மையங்களும்,6 துணை கூட்டு மருந்து சிகிச்சை மையங்களும்,4 அரசு ரத்த வங்கிகளும்,7 ரத்த சேகரிப்பு மையங்களும், ஒரு இலவச சட்ட ஆலோசனை மையமும் செயல்பட்டு வருகிறது.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உழவர் பாதுகாப்புத்திட்டம்,முதியோர் உதவித்தொகை திட்டம், விதவை உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்,கோவை சாரதாம்பாள் கோவில் திருமண மண்டபத்தில் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட சமபந்தி போஜனத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆட்சியர் சமீரன் உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.

மேலும் படிக்க