• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எங்கள் மீது குறை கூறுபவர்கள் காந்தியின் வாரிசு அல்ல – டிடிவி தினகரன்

November 11, 2017 தண்டோரா குழு

எங்கள் மீது குறை கூறுபவர்கள் காந்தியின் வாரிசு அல்ல என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சசிகலா மற்றும் தினகரனுக்கு சொந்தமான பல இடங்களில் மூன்றாவது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,

வருமானவரி சோதனைக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி.புதுச்சேரியில் உள்ள எனது இல்லத்தில் பாதாள அறை எதுவும் இல்லை.கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது ஏன்?வருமான வரித்துறை சோதனை முடிந்த பிறகு உண்மை தெரிய வரும்.கைப்பற்றப்படும் பணம், நகைகள் அனைத்தும் பதுக்கப்பட்டது அல்ல.வருமான வரி சோதனைக்காக ஒரே இடத்தில் கார்களை வாடகைக்கு எடுத்தது ஏன்? என தினகரன் கேள்வி எழுப்பினார்.

மேலும்,1996 ஆம் ஆண்டு கூட எங்கள் வீட்டில் சோதனை நடைபெற்றது. இதுபோன்ற சோதனை வழக்கமாக நடைபெறுவது தான், எங்கள் கட்சி சிறிய கட்சி தான் பிறகு எதற்கு எங்களை தொந்தரவு செய்கிறார்கள்? ஐடி அதிகாரிகள் தவறான தகவலை தெரிவிக்கவில்லை. தங்களை குற்றம் சாட்டி வருபவர்கள் காந்தியின் வாரிசுகள் அல்ல. கட்சியை காப்பாற்ற நாங்கள் போராடி வருகிறோம். அதனை தடுக்க ஏதோ உள்நோக்கத்துடன் தான் இது நடக்கிறது எனக் கூறினார்.

மேலும் படிக்க