• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எங்கள் மீது குறை கூறுபவர்கள் காந்தியின் வாரிசு அல்ல – டிடிவி தினகரன்

November 11, 2017 தண்டோரா குழு

எங்கள் மீது குறை கூறுபவர்கள் காந்தியின் வாரிசு அல்ல என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சசிகலா மற்றும் தினகரனுக்கு சொந்தமான பல இடங்களில் மூன்றாவது நாளாக தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,

வருமானவரி சோதனைக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி.புதுச்சேரியில் உள்ள எனது இல்லத்தில் பாதாள அறை எதுவும் இல்லை.கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது ஏன்?வருமான வரித்துறை சோதனை முடிந்த பிறகு உண்மை தெரிய வரும்.கைப்பற்றப்படும் பணம், நகைகள் அனைத்தும் பதுக்கப்பட்டது அல்ல.வருமான வரி சோதனைக்காக ஒரே இடத்தில் கார்களை வாடகைக்கு எடுத்தது ஏன்? என தினகரன் கேள்வி எழுப்பினார்.

மேலும்,1996 ஆம் ஆண்டு கூட எங்கள் வீட்டில் சோதனை நடைபெற்றது. இதுபோன்ற சோதனை வழக்கமாக நடைபெறுவது தான், எங்கள் கட்சி சிறிய கட்சி தான் பிறகு எதற்கு எங்களை தொந்தரவு செய்கிறார்கள்? ஐடி அதிகாரிகள் தவறான தகவலை தெரிவிக்கவில்லை. தங்களை குற்றம் சாட்டி வருபவர்கள் காந்தியின் வாரிசுகள் அல்ல. கட்சியை காப்பாற்ற நாங்கள் போராடி வருகிறோம். அதனை தடுக்க ஏதோ உள்நோக்கத்துடன் தான் இது நடக்கிறது எனக் கூறினார்.

மேலும் படிக்க