• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊரடங்கு காரணமாக மதுபானங்களை வாங்க குவிந்த மதுபிரியர்கள்

May 9, 2021 தண்டோரா குழு

ஊரடங்கு காரணமாக மதுபானங்களை வாங்க குவிந்த மதுபிரியர்கள், வங்கி அட்டைகள் பயன்படுத்த முடியாததால், ஏ டி எம் வாசலில் வரிசையில் நின்று பணம் எடுத்துவிட்டு மதுபானம் வாங்குகின்றனர்.

தமிழகத்தில் இரண்டாம் கட்ட ஊரடங்கு நாளை முதல் 24 ஆம் தேதி வரை அமுலுக்கு வர இருக்கிறது.இந்நிலையில் இருவாரங்களுக்கு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை பாப்பநாயக்கன் பாளையத்திலுள்ள எலைட் மதுபான கடையில் , வெளி நாட்டு மது வகைகளை வாங்குவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட மதுபிரியர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

கொரொனா தொற்று காரணமாக ஒரே நேரத்தில் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மதுபிரியர்களிடம் பணம் மட்டுமே வாங்கப்படுவதால்,வங்கி அட்டைகளை பயன்படுத்த முடியாமல்,வாடிக்கையாளர்கள் அருகில் இருக்கும் ஏ டி எம் மில் கூட்டமாக வரிசையில் நின்று பணம் எடுத்து , மது வாங்குகின்றனர்.

வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்களை வாங்குவதை போல,மதுபானங்களை மதுபிரியர்கள் அள்ளிச்செல்கின்றனர். மதுபானம் வாங்க நீண்ட வரிசையில் மணிகனக்கில் காத்திருக்கும் குடிமகன்கள்,யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை.

மேலும் படிக்க