• Download mobile app
07 Jul 2025, MondayEdition - 3435
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உ.பி யில் முதலை தாக்கி பெண் பலி

June 8, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேஷ் மாநிலத்தின் 2௦ வயது பெண்ணை முதலை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

உத்தரபிரதேஷ் மாநிலத்தின் எட்டாவா மாவட்டத்திலுள்ள சாகர்நகர் நகரில் தேசிய சாம்பல் சரணாலயம் உள்ளது. அதன் அருகிலுள்ள நதியின் கரையில் நீரஜ் குளித்துக்கொண்டிருந்த போது நதியிலிருந்த முதலை ஒன்று அவரை தாக்கியுள்ளது. இதைக்கண்ட அவருடைய குடும்பத்தினர் சத்தம் போட்டுள்ளனர்.முதலை நீரஜை தண்ணீருக்குள் இழுத்து சென்றுவிட்டது.

உடனே, அவருடைய பெற்றோர்கள் சரணாலயதிலுள்ள அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே அவர்களும் அந்நகரின் காவல்துறை உதவியுடன் நீராஜின் உடலை மீட்க முயற்சி செய்து வருகின்றனர்.

நீரஜின் குடும்பத்தினர் கூறுகையில்,

“நீரஜ் ஏகதாசி நாளை விரதம் இருந்து அனுசதிரித்து வந்தாள். நதியில் குளித்துவிட்டு வருவதற்காக நீரில் இறங்கினாள்” என்று தெரிவித்தனர்.

“முதலைகள் முட்டையிடும் காலமிது. சரணாலயம் அருகில் முதலைகள் முட்டையிட்டிருக்கலாம். இதை அறியாத நீரஜ், அந்த இடத்திற்கு அருகில் குளிக்க சென்றிருக்கலாம். இதனால் முதலை அவரை தாக்கியிருக்கலாம். பெண் முதலைகள் தங்கள் முட்டைகள் மற்றும் குஞ்சு பொரிக்கும் வரை அதிக கவனத்தோடு பாதுகாப்பு தரும். கோடை காலத்தில் மக்கள் நதி கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்”

தேசிய சாம்பல் சரணாலயம் நூற்றுக்கணக்கான முதலைகளுக்கு வீடாகும். சுமார் 5௦௦ முதலைகள் அங்கு இருந்ததாக கடந்த முறை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. சாம்பல் நதியில் தண்ணீர் அளவு குறைந்து வருவதால், அதில் வாழும் மீன்கள் மற்றும் நீர் வாழ் விலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. இதன் காரணமாக முதலைகளின் தாக்குதல் அதிகரித்து வருவதாக சுற்றுசூழல் ஆர்வலர் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க