• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உ.பி யில் புதுமண தம்பதிகளுக்கு பரிசாக காண்டம்!

July 6, 2017 தண்டோரா குழு

புதுமணத்தம்பதிகளுக்கு பரிசு பொருட்களுடன் ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரை அடங்கிய பெட்டியை வழங்க உத்தரபிரதேஷ் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை நாளாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து
உத்தர பிரதேஷ் மாநிலத்தில் மிசின் பரிவார் விகாஸ் திட்டம் ஒன்றை தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் புதுமண தம்பதிகளுக்கு தரப்படும் திருமண பரிசுகளுடன், அம்மாநில அரசும் பாதுகாப்பான உடல் உறவு மற்றும் குடும்ப கட்டுப்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறிந்துக்கொள்ளும் விதமாக, அவர்களுக்கு பரிசு தந்துள்ளது.

அதன்படி, அம்மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார அமைப்பு(ASHA) உறுப்பினர்கள் புதுமண தம்பதியினருக்கு அந்த பரிசை வழங்குவார்கள். அந்த பரிசு பெட்டியில் ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள், டவல், கைக்குட்டை, நகம் வெட்டும் கருவி, சீப்பு மற்றும் கண்ணாடி ஆகியவை அதில் இருக்கும்.

அதோடு குடும்பக்கட்டுப்பாடு, பாதுகாப்பான உடல் உறவு, மற்றும் குழந்தை பிறப்பு இடைவெளி ஆகியவற்றை விவரிக்கும் சுகாதார துறையின் கடிதமும் அதில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க