• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உ.பி யில் சிங்கம் புலிகளுக்கு மாட்டிறைச்சி கிடையாது புதிய அரசு அதிரடி

March 25, 2017 தண்டோரா குழு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க. அரசு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் இறைச்சி வெட்டும் ஆலைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 325 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் இறைச்சி வெட்டும் ஆலைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் கான்பூர் உயிரியில் பூங்காவில் உள்ள விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

லக்னோ மிருகக்காட்சிசாலையில் இருக்கும் விலங்குகளுக்கு ஒரு நாளுக்கு 235 கிலோ மாட்டு இறைச்சி உணவாக அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரு தினங்களாக வெறும் 80 கிலோ இறைச்சி தான் வழங்கப்படுவதாகவும் இதனால் சிங்கங்களும் புலிகளும் மட்டுமின்றி சிறுத்தை, கழுதைப்புலி, ஓநாய்கள் மற்றும் குள்ள நரி, போன்ற மிருகங்களும் பாதிக்கப்படுவதாகவும்
எட்டாவா லயன் சபாரி மிருகக்காட்சி சாலை துணை இயக்குனர் அனில் படேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்கிருக்கும் மிருகங்களுக்கு உணவில் எருமை இறைச்சி பயன்படுத்தப்படுவதற்கு மாறாக ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றத்தால் உ.பி சிங்கங்களும் தங்களின் உணவை மாற்றிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள நான்கு பூங்காக்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க