• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி மாநிலத்தில் மணமகனுக்கு 11 ரூபாயை கொடுத்து விசித்திர திருமணம்

December 13, 2016 தண்டோரா குழு

உத்திரபிரதேசத்தில் பண தட்டுப்பாடால், ஒரு குடும்பத்தினர் மணமகனுக்கு 11 ரூபாயை கொடுத்து விசித்திரமான முறையில் திருமணத்தை நடத்தியுள்ளனர்.

நவம்பர் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 5௦௦ மற்றும் 1,௦௦௦ ரூபாய் செல்லாது என்ற அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பணத்தட்டுபாடு ஏற்பட்டது. இதனால், வடஇந்தியாவின் உத்திரபிரதேஷம் மாநிலம் கிரேட் நொய்டாவை அடுத்துள்ள நட்டோகி மதியா என்ற கிராமத்தை சேர்ந்த மகாவீர் சிங்க், ஞானோ தம்பதியினரின் தங்கள் மகள் சன்சுவின் திருமணத்தை நடத்த முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியிருந்தனர்.

இந்நிலையில், லாரி ஓட்டுனரான யோகேஷ் எளிமையான முறையில் சன்சுவை திருமணம் செய்ய முன்வந்தார். இதையெடுத்து, யோகேஷ் சன்சு தம்பதியினர் மாலை மாற்றி திருமணம் செய்துக்கொண்டனர். அவர்களுடைய திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினருக்கு வெறும் டீ மட்டுமே வழங்கபட்டது.

மேலும், வரதட்சணையாக 11 ரூபாயை பெற்றுக்கொண்டு மனைவியை அழைத்துச் சென்றார் யோகேஷ். இவர்களின் நிலையை பார்த்த அந்த கிராமத்தின் இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து புது தம்பதியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்

மேலும் படிக்க