• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி.அரசை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் முற்றுகை போராட்டம்!

October 6, 2020 தண்டோரா குழு

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு ஆறுதல் கூற சென்ற கேம்பஸ் ஃப்ரண்ட் தேசிய பொருளாளர் மற்றும் நிர்வாகிகளை கைது செய்த யோகியின் UPஅரசை கண்டித்தும் கேம்பஸ் ஃப்ரண்ட் நிர்வாகிகளை உடனே விடுதலை செய்யக் கோரியும் கோவை மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இன்று காலை 11.மணி அளவில் கோவை BSNL அலுவலக முற்றுகை மாவட்ட தலைவர் அபுதாஹிர் தலைமையில் நடைபெற்றது.

இதில் கேம்பஸ் ஃப்ரண்ட் தமிழ் மாநில பொதுச்செயலாளர் கா.அஷ்ரப் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாணவர்கள் திரளாக மத்திய மற்றும் உ.பி மாநில அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி BSNL அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மேலும் படிக்க