• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் கற்பழிப்பு

May 25, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் நொய்டா அருகே ஜேவர் என்ற நகரிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினர் ஒருவரைப் பார்க்க அதிகாலையிலேயே புலந்த்சாகர் நகரை நோக்கி காரில் 4 பெண்கள் மற்றும் ஒரு ஆண் பயணம் செய்துள்ளனர்.

அப்போது, வழியில் அவர்களது கார் சக்கரத்தில் ஏதோ மோதியது போல உணர்ந்துள்ளனர். இதையடுத்து காரிலிருந்து இறங்கி பார்த்தபோது இரண்டு டயர்கள் பஞ்சர் ஆகியிருப்பதைக் கண்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் காரில் இருந்த பெண்களை கடந்த முயற்சி செய்துள்ளனர். அதனை காரில் இருந்த ஒருவர் தடுக்க முயற்சி செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை கொன்று காரில் இருந்த பெண்கள் நால்வரையும் தனியே இழுத்துச்சென்று கூட்டுபலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுக்குறித்து தகவலறிந்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். நகரின் முக்கிய சாலையில் காலையலேயே நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க