• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு அஞ்சுகிறது – மு.க.ஸ்டாலின்

June 24, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு அஞ்சுகிறது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டத்தை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில் “உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை அரசு நீட்டித்திருக்கிறது. அந்த மசோதாவிற்கு எதிர்ப்பை காட்டுவதற்காகவே திமுக வெளிநடப்பு செய்துள்ளோம்.

அதிமுகவிடம் இரட்டை இலை சின்னம் இல்லை, கட்சியும் இரண்டாக மூன்றாக உடைந்திருப்பதால் தேர்தலை நடத்த அஞ்சுகிறது.” என்றார் ஸ்டாலின்.

மேலும் படிக்க