• Download mobile app
10 Feb 2026, TuesdayEdition - 3653
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கோவையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் உறுதிமொழி

July 12, 2021 தண்டோரா குழு

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தினம் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஓட்டி சுகாதாரத்துறை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

மேலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரசார வாகன இயக்கமும் துவக்கி வைக்கப்பட்டது. இப்பிரச்சார வாகன விழிப்புணர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ராம துரை முருகன் துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க