• Download mobile app
01 Jun 2025, SundayEdition - 3399
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீடு

May 31, 2025 தண்டோரா குழு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று (31.5.25) அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்விற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை-யை நடத்தும் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் குகன் வரவேற்புரை வழங்கினார்.

இன்று, மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்களிடம் உள்ள புகையிலை பழக்கத்தை கைவிட வேண்டிய அவசியம் குறித்தும், புகையிலை பயன்பட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அவர்களிடம் எளிதில் எடுத்துரைக்கும் விதமாக, இந்த நிகழ்வில் புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய பல தலைப்புகளில் 30 ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளதாக டாக்டர் குகன் அனைவரையும் வரவேற்ற பின்னர் தெரிவித்தார். அதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அனைவரின் முன்னிலையில் இந்த ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ தொகுப்பை வெளியிட்டார்.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் பேசுகையில், இந்த நிகழ்ச்சியில் தனது தொடர் பணிகளுக்கு மத்தியில் கலந்து கொண்டு சிறப்பித்ததற்காக கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

ஆர். சுந்தர் தொடர்ந்து பேசுகையில்,

வேகமாக செல்லும் இந்த உலகத்தில் மக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள நேரம் மிக குறைவாக தான் உள்ளது என சொல்லப்படுகிறது.
மக்களுக்கு உள்ள குறைந்த நேரத்தில், அவர்கள் கவனத்தை பெறும் வகையில் இந்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இவை புகையிலை உட்கொள்வதால் புற்றுநோய், சுவாசம் தொடர்பான பாதிப்பு, இதய நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பார்வையாளர்களுக்கு விளக்கும்.

இது போல ஒவ்வொரு ஆண்டும் ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் தனித்துவமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒரே காரணம் தான் எங்களுக்கு உண்டு – அது அதிகப்படியான மக்களுக்கு புற்றுநோய் மற்றும் புகையிலை பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே என்றார்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் பேசுகையில்,

இன்று சமுதாயத்தில் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய நெடுங்கால பாதிப்புகள் பற்றி எடுத்துரைக்க வேண்டியது அவசியமாகிறது.
அதேசமயம் சில தகவல்கள் படி, ஒரு விஷயத்தின் மேல் பொதுமக்கள் செலுத்தக்கூடிய கவனத்திற்கான கால அளவு என்பது குறுகிக்கொண்டே வருகிறது என கூறப்படுகிறது.
எந்த அளவுக்கு என்றால் ஒரு செய்தி கட்டுரையை முழுவதுமாக வாசிக்க எத்தனை நிமிடங்கள் இருக்கும் என்பதையெல்லாம் வாசிப்பவர்களுக்கு தெரிவிக்கும்படி தொழில்நுட்பம் என்று வளர்ந்துள்ளது.

புகையிலை பயன்பாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமுதாயத்திற்கு எடுத்து சொல்ல வேண்டிய கட்டாயம் அதிகரித்து உள்ள காலத்தில், இப்படிப்பட்ட புது முயற்சிகள் பொதுமக்களின் கவனத்தை எளிதில் பெறமுடியும். இந்த முயற்சியை எடுத்த ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு எனது வாழ்த்துக்கள்.

தொடர்ந்து இந்த நிகழ்வில் டாக்டர் குகன் பேசுகையில்:-

22 ஆண்டுகளாக ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் தொடர்ச்சியாக புகையிலை மற்றும் புற்றுநோய்கள் குறித்து பொதுமக்களிடம் பல்வேறு தனித்துவமான வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதற்கு முன்னதாக புற்றுநோய் விழிப்புணர்வு கொண்ட வீடியோக்கள், டிஜிட்டல் புத்தகங்கள், இணையதளம் என பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இம்முறை இளைஞர்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் நோக்கில் புற்றுநோய் விழிப்புணர்வு பற்றிய 25 தலைப்புகளில் ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில் சுமார் 25.3 கோடி பேர் புகையிலையை ஏதோ ஒரு வகையில் எடுக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களில் சுமார் 4.5 கோடி முதல் 5 கோடி பேர் பெண்களாகவும், 20 கோடி பேர் ஆண்களாகவும் உள்ளனர். பெண்கள் பெரிதும் புகையிலை மெல்லும் வழக்கத்தை கொண்டவர்களாகவும், குறைவானவர்களே புகை பழக்கம் கொண்டவர்களாகவும் உள்ளனர். ஆண்கள் அதிகமானோர் புகைபிடிக்கும் வழக்கம் கொண்டவர்களாகவே உள்ளனர்.

இந்திய ஜனத்தொகையில் 20% முதல் 25% பேர் புகையிலை பயன்படுத்தும் வழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். அதில் 30-40% பேர் இளைஞர்களாக உள்ளனர். ஆண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோய்களாக நுரையீரல், தலை மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்களே உள்ளன. இவை ஏற்பட புகையிலை பயன்பாடே பெரிதும் காரணமாக உள்ளது. மேலும் இதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படவும் புகையிலை ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. புகையிலையில் 400க்கும் அதிகமான வேதி பொருட்கள் உள்ளன. அதில் 40 முதல் 50 வேதிப்பொருட்கள் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை.

புகையிலை என்பது அதை பயன்படுத்துபவரை மட்டுமல்ல, அதை பயன்படுத்துபவர் அருகில் நிற்பவரையும் பாதிக்கும். ஒருவர் புகைபிடிக்கும் போது அவர் அருகில் நிற்பவர்களுக்கு சுவாச பிரச்சனைகள் ஏற்பட காரணமாக அமையும். எனவே இதுபோன்ற பல பாதிப்புகள் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும். இதை மக்களிடம் வலியுறுத்தி, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வருடத்தில் 1 முறையாவது அவர்கள் இதுகுறித்து சிந்திக்கவேண்டும் என்பதற்காகவே நாங்கள் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துகிறோம் என்றார்.
நிகழ்வின் இறுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்திகேஷ் நன்றியுரை வழங்கினார்.

இன்று (31.5.2025) முதல் 30.6.2025 வரை தினமும் 1 இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் SRIOR COIMBATORE கணக்கில் பதிவேற்றம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் எஸ் என் ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார்,மருத்துவ இயக்குனர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன் மற்றும் மருத்துவமனையின் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க