June 14, 2017
தண்டோரா குழு
மறைந்த ‘இயக்குனர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை வைரமுத்துவும், கமலஹாசனும் இணைந்து அவரது சொந்த ஊரில் திறந்து வைக்கவுள்ளனர்.
இயக்குநர் பணியில் மட்டுமல்ல ஒரு சிறந்த தயாரிப்பாளர்கவும் விளங்கியாவர் கே.பாலசந்தர்.இவர் பாடலாசிரியர் வைரமுத்துவிற்கும் இளையராஜாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு பாடல் எழுதாமல் இருந்த போது தன்னுடைய படங்களுக்கு பாடல் எழுத வைத்ததோடு மட்டுமல்லாமல் ‘ரோஜா’ படத்தில் ஏ.ஆர்.ரகுமானிடம் சிபாரிசு செய்து அந்த படத்தில் பாட்டு எழுதும் வாய்ப்பினையும் அளித்துள்ளார்.
இதற்காக அவருக்கு நன்றிக்கடனாக,கே.பாலச்சந்தரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில், கே.பாலச்சந்தரின் வெண்கலச் சிலையை வைரமுத்து திறந்து வைக்கிறார்.ஜூலை 9ம் தேதி நடைபெறும் இந்த விழாவில்,கமல் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைப்பார் என்று கூறப்படுகிறது.