• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி.மருத்துவமனை வளாகத்தில் மரம் நடு விழா

June 5, 2020 தண்டோரா குழு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனை வளாகத்தில் மரம் நடு விழா நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை பி.எஸ்.ஜி.பல் நோக்கு மருத்துவமனை வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா மருத்துவமனையின் இயக்குனர் மருத்துவர் புவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

தொடர்ந்து அவர் பேசுகையில்

பல்வேறு அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வந்தாலும்,சுற்றுச்சூழல் துறையின் அவசியத்தை தற்போது பொதுமக்கள் உணர்ந்து வருவதாகவும், சுற்றுச்சூழலின் பாதுகாப்பு கருதி, எங்களது மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் மறுசுழற்சி,மூலிகை தோட்டக்கலை பராமரிப்பு,மற்றும் பசுமை மரங்கள் வளர்ப்பு என சுற்றுச்சூழல் துறையில் அதிகம் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அலுவலர் டாக்டர் மாதவன்,பழனிசாமி,மருத்துவர் பாலு,தோட்ட பராமரிப்பாளர் வெங்கடாசலம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க