• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகின் அதிக எடை கொண்ட பெண் சிகிச்சைக்காக இந்தியா வருகை

February 11, 2017 தண்டோரா குழு

உலகின் அதிக எடை கொண்ட பெண்ணாக கருதப்படும் எமான் அமகது சிகிச்சைக்காக இந்தியா வந்துள்ளார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த எமான் அகமது உலகின் அதிக எடை கொண்ட பெண்ணாக கருதப்படுகிறார். சுமார் 500 கிலோ எடையுடன் மிகவும் சிரமப்பட்டு வரும் இவருக்கு உலக நாடுகள் சிகிச்சை அளிக்க மறுத்தனர்.

இந்நிலையில், மும்பையில் உள்ள மருத்துவர் முப்பஷால் எமானுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதாக கடந்த டிசம்பர் மாதம் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, சிகிச்சைக்காக எமான் இன்று மும்பை வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு விரைவில் எடைக் குறைப்பதற்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.

முன்னதாக, இந்தியா வருவதற்கு விஷா தொடர்பான பிரச்சினை இருப்பதாக கூறி எமான் அகமது மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் உதவி கோரினார். மருத்துவ சிகிச்சை தொடர்பான பிரச்சினை என்பதால் அவருக்கு உடனடியாக இந்தியா வருவதற்கு சுஷ்மா உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க