• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“உறவுக்கு கைக்கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதே எங்கள் நிலைப்பாடு! – முக ஸ்டாலின்

June 17, 2021 தண்டோரா குழு

உறவுக்கு கைக்கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதே எங்கள் நிலைப்பாடு என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக முக.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் முறையாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன்; 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளோம். நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும். மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் கோரிக்கை விடுத்துள்ளேன்; ஜி.எஸ்.டி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன்.

பிரதமருடனான சந்திப்பு மகிழ்வு, மன நிறைவை தருகிறது; தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதற்காக தனது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்தார்.தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு
முழு ஒத்துழைப்பு தருவதாக
பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

“உறவுக்கு கைக்கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதே எங்கள் நிலைப்பாடு!தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்!”

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும் படிக்க