• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உரிமம் வழங்கும் வரை தண்ணீர் லாரிகளை இயக்க மாட்டோம் கோவை தண்ணீர் லாரி உரிமையாளர்கள்

August 21, 2019 தண்டோரா குழு

தமிழகத்தில் இயங்கி வரும் தண்ணீர் லாரிகளுக்கு முறையான உரிமம் வழங்கும் வரை கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தண்ணீர் விநியோக உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தண்ணீர் லாரி உரிமையாளர் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,

தமிழகம் முழுவதும் 25000 லாரிகள் இயக்கபடுவதாகவும் கோவை மாவட்டத்தில் 3000 லாரிகள் இயங்கி வந்த நிலையில் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து உள்ளதாக தெரிவித்தனர்.

இதனால் கல்வி நிலையங்கள், மருத்துவமனை,விடுதிகளில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் என தெரிவித்தனர். தமிழக அரசு தங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் படிக்க