• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயிரை பனயம் வைத்து வேலை செய்த மின் ஊழியர் !

September 29, 2020 தண்டோரா குழு

கோவை க.க.சாவடி பகுதியில் ஆபாத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தில் ஏறி, மின் ஊழியர் ஒருவர் உயிரை பனயம் வைத்து வேலை செய்த சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை க.க.சாவடி பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் நீண்ட நாட்களாக சிமெண்ட் உடைந்து கிழே விழும் அபாயத்தில் உள்ளது. மேலும் கம்பத்தின் சிமெண்ட் உடைந்து,உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மிக மோசமான நிலையில் உள்ளது.தற்போது மழை காலம் என்பதால் கம்பம் எப்போது வேண்டுமானும் உடைந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் உடைந்த பாகங்கள் வழியாக மின்சாரம் கசிந்து கம்பத்தை தொடும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு உடைந்து விழும் நிலையில் இருந்த மின் கம்பத்தின் மீது மின் ஊழியர் ஒருவர் உயிரை பனயம் வைத்து ஏறி வேலை செய்தார்.அதை கண்ட அப்பகுதி மக்கள் கவனமாக இருங்கும் படி கூறியதோடு, உடனடியாக கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கோரிக்கை வலியுறுத்தி இன்று மின்கம்பத்தை சீர் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க