• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உயிரை பனயம் வைத்து வேலை செய்த மின் ஊழியர் !

September 29, 2020 தண்டோரா குழு

கோவை க.க.சாவடி பகுதியில் ஆபாத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தில் ஏறி, மின் ஊழியர் ஒருவர் உயிரை பனயம் வைத்து வேலை செய்த சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை க.க.சாவடி பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் நீண்ட நாட்களாக சிமெண்ட் உடைந்து கிழே விழும் அபாயத்தில் உள்ளது. மேலும் கம்பத்தின் சிமெண்ட் உடைந்து,உள்ளே இருக்கும் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மிக மோசமான நிலையில் உள்ளது.தற்போது மழை காலம் என்பதால் கம்பம் எப்போது வேண்டுமானும் உடைந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் உடைந்த பாகங்கள் வழியாக மின்சாரம் கசிந்து கம்பத்தை தொடும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு உடைந்து விழும் நிலையில் இருந்த மின் கம்பத்தின் மீது மின் ஊழியர் ஒருவர் உயிரை பனயம் வைத்து ஏறி வேலை செய்தார்.அதை கண்ட அப்பகுதி மக்கள் கவனமாக இருங்கும் படி கூறியதோடு, உடனடியாக கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் கோரிக்கை வலியுறுத்தி இன்று மின்கம்பத்தை சீர் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க