• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 16 லட்ச ரூபாய் நிதி திரட்டி உதவி வழங்கிய சக காவலர்கள்..!

September 6, 2021 தண்டோரா குழு

கோவையில் உயிரிழந்த காவலரின்
குடும்பத்திற்கு சக காவலர்கள் 16 லட்சத்து 53 ஆயிரத்து 265 ரூபாய் குடும்ப உதவி நிதியாக வழங்கினர்.

தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 2002ம் பேட்ஜை சேர்ந்த காவலர்கள் தொடர்ச்சியாக தங்களின் சக காவலர்களின் குடும்பங்களுக்கு உதவி வருகின்றனர்.இந்த நிலையில் 2002-ம் பேட்ஜில் தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்த சிவகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் பணியில் இருந்த நிலையில் உயிரிழந்தார்.

இப்படியிருக்க அவரின் பேட்ஜை சேர்ந்த சக காவலர் அவரின் குடும்பத்திற்கு உதவ நிதி திரட்டினர். இப்படி சேகரித்த 16 லட்சத்து 53 ஆயிரத்து 265 ரூபாயை நினைவேந்தல் நடத்தி மறைந்த சிவகுமாரின் மகன் மற்றும் மனைவிக்கு 8 லட்சத்து 40 ஆயிரத்து 500 ரூபாயும், தாய் தந்தைக்கு எட்டு லட்சத்து 12 ஆயிரத்து 765 ரூபாய் என பிரித்து வழங்கினர்.

மேலும் படிக்க